ஏர் இந்தியா விமான நிறுவனம் மூடப்படுகிறதா..?தீயாய் பரவும் தகவல்கள்

  • ஏர் இந்தியா விமான நிறுவனம் மூடப்படுவதாக காட்டூத் தீயாய் பரவிய தகவல்.
  • மூடப்படுவதாக வந்த தகவல் அனைத்தும் புரளி,  ஆதாரமற்றது என்று ஏர் இந்தியா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்  ஆன அஸ்வினி லோஹானி தெரிவித்துள்ளார்.

ஏர்இந்தியா நிறுவனம் ஆனது அண்மைக்காலமாகவே கடன் சுமையில் தத்தளித்து வருவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.மேலும் அதன் பங்குகள் தொடர்பாகவும் தகவல்கள் வெளியாகி கொண்டிருந்த நிலையில் தான் ஏர் இந்தியா விமான நிறுவனம் மூடப்படுவதாக ஒரு செய்தி பறந்து வந்து.இது மக்கள் இடத்தில் அதிகவேகமாக பரவியது.

Related image

செய்தி அறிந்த அதன் தலைவரும் மற்றும் நிர்வாக இயக்குநரும் ஆன அஸ்வினி லோஹானி  பதறி அடித்து கொண்டு இந்த விவகாரம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அதில் ஏர் இந்தியா விமான நிறுவனமானது மூடப்படுவதாக வந்த தகவல்கள் அனைத்தும் புரளி ,எந்த அடிப்படை ஆதாரமற்றது. ஏர் இந்தியா அளித்து வரும் விமான சேவை தொடரும்.ஏர் இந்தியாவிற்கு  கடன் சுமை இருக்கலாம் இதனால் பயணிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.மேலும் விமானச் சேவை வழங்கி வருகின்ற மிகப்பெரிய நிறுவனமாக தற்போது ஏர்இந்தியா தான் முதல் இடத்தில் உள்ளது எனவே நிறுவனம் விமான சேவையை நிறுத்தி விடும் மேலும்  நிறுவனத்தை  மூடப்படப் போகிறார்கள் என்று வெளியான தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்று தெரிவித்துள்ளார்.

author avatar
kavitha