#BREAKING: கொடூரன் கொரோனாவால் ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து..

சீனாவில் உள்ள உகான் நகரில் இருந்து  கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் சீனாவை மட்டுமல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கொரோனா  உலகை அச்சுறுத்தி வருகிறது.

கொரோனா வைரசால்  உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஏர் இந்தியா விமான நிறுவனம் கொடூரன் கொரோனா  அச்சம் காரணமாக இத்தாலி, பிரான்ஸ் ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தனது சேவை விமான சேவை ரத்து செய்துள்ளது.

author avatar
murugan