கோவையில் அதிமுக உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது!

கோவையை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டி அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம்.

கோவையில் திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளது. சிவானந்தா காலனியில் உண்ணாவிரத போராட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சொத்து வரி, பால் விலை, மின் கட்டணம், கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கண்டித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கோவையை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டியும் போராட்டம் நடைபெற்று வருகிறது. குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை செப்பனிட கோரியும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த போராட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment