அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரிய அவசர வழக்கு..! சற்று நேரத்தில் தீர்ப்பு..!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தடை கோரிய வழக்கிற்கு சற்று நேரத்தில் தீர்ப்பு. 

அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கபட்ட நிலையில், நேற்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த நிலையில்,  அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரி ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த மனோஜ் பாண்டியன் அவசர முறையீடுசெய்திருந்தார். இந்த முறையீட்டை அவசர வழக்காக மனுதாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்புக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் இன்று காலை ஓபிஎஸ் மனு மீதான விசாரணைத் தொடங்கியது.

ஓ.பி.எஸ். தரப்பு வாதம்:

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என அறிவித்துவிட்டு இந்த தேர்தலை அறிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை காலை பொதுக்குழு வழக்கை விசாரித்து நீதிமன்றம் தள்ளிவைத்த நிலையில், அன்று மாலையே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

சற்று நேரத்தில் தீர்ப்பு :

பொதுச்செயலாளர் தேர்தலை தள்ளி வைப்பதால் எதுவும் நடந்து விடாது என்றும் தேர்தலுக்கு தடை விதிக்காவிட்டால் தீர்மானத்திற்கு எதிரான பழைய வழக்கு செல்லாததாகிவிடும் என்று ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்தார். இதையடுத்து தற்பொழுது இபிஎஸ் தரப்பு வாதம் தொடங்கியுள்ளதால் இந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment