அதிமுக செய்யவில்லை, திமுக செய்தது – அமைச்சர் கேஎன் நேரு

திமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் பணி மேற்கொண்டதால் தண்ணீர் வடிந்துள்ளது என அமைச்சர் கேஎன் நேரு பதில்.

அதிமுக செய்யாததால் தான் மழைநீர் தேங்கியது, திமுக செய்ததால் தான் மழைநீர் தேங்கவில்லை என அமைச்சர் கேஎன் நேரு தெரிவித்துள்ளார். கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 4 இடங்களில் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாமை அமைச்சர்கள் கேஎன் நேரு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கேஎன் நேரு, அதிமுக எந்த பணியும் மேற்கொள்ளாததால் தான் மழைநீர் தேங்கியது. இப்போது திமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் பணி மேற்கொண்டதால் தண்ணீர் வடிந்துள்ளது. இதுதான் எங்களின் பதில் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு தெரிவித்தார்.

மேலும், 10 ஆண்டுகாலம் ஆட்சியில அவங்க வேலை செஞ்சு இருந்தா போன வருசம் எப்படி இவ்வளவு தண்ணீர் சென்னையை பாதிச்சு இருக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதிலடி கொடுத்தார்

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment