குலுக்கல் முறையில் அதிமுக வேட்பாளர் வெற்றி..!

நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. அதில், திமுக, காங்கிரஸ் சார்பில் தலா 2 பேர், பாஜக, தேமுதிக சார்பில் தலா ஒருவரும், சுயேட்சைகள் 3 பேரும் வெற்றி பெற்றனர். இதில் 2 சுயேட்சைகள் சமீபத்தில்  திமுகவில்  இணைந்தனர்.  திமுக சார்பில் தலைவர் வேட்பாளராக  சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று திமுகவில் இணைந்த கமலா நேரு வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

அதிமுகசார்பில் மாவட்ட மகளிரணி செயலாளரும், பேரூராட்சி 3-வது வார்டு கவுன்சிலருமான ஜான்சி ராணி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இதைத்தொடர்ந்து இன்று காலை பேரூராட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 2 பேருக்கும் தலா 9 ஓட்டுகள் கிடைத்தது.

இதனால், குலுக்கல் முறையில் வெற்றியை நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது. குலுக்கல் முறையில் பேரூராட்சி தலைவராக அதிமுக  ஜான்சிராணி தேர்வானார்.

 

author avatar
murugan