புதுச்சேரியில் டிசம்பர் 28ம் தேதி பந்த் – அதிமுக அறிவிப்பு

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று அதிமுகவின் மாநில செயலாளர் கோரிக்கை.

மாநில அந்தஸ்து கோரி புதுச்சேரியில் வரும் 28-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது. அதன்படி, புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் போராட்டம் நடைபெறும் என மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

மேலும், மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர மறுக்கின்றனர். சட்டமன்றத்தில் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை என புதுச்சேரி மாநில அதிமுக குற்றசாட்டியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment