இன்று மாலை 6 மணிக்கு ஆன்லைனில் கல்லூரிகள் சேர்க்கை ஆரம்பம்!

இன்று மாலை 6 மணிக்கு மேல் அணைத்து கல்லூரிகளுக்குமான ஆன்லைன் சேர்க்கை துவங்குகிறது.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே இந்தியா முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளியாகிய 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அடுத்து மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கு மும்முரமாக உள்ளனர்.

இந்நிலையில், முதன்முறையாக தமிழகம் முழுவதும் ஆன்லைனில் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் பாலிடெக்னிக் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், அதற்கான நேரம் இன்று ஜூலை 20 மாலை 6 மணிக்கு துவங்குகிறது. இதற்கான தனி வழிகாட்டுதல் மையங்களையும் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

author avatar
Rebekal