பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கூடுதல் பொறுப்பு…!

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு, பிரதமர் மோடி தலைமையில் பாஜக 2-வது முறையாக ஆட்சியை பிடித்த நிலையில், பிரதமர் மோடியின் அமைச்சரவை நேற்று முதல் முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையில் 43 பேர் இடம்பெற்றுள்ளனர். புதிய மத்திய அமைச்சரவையில் 11 பெண்கள், 13 வழக்கறிஞர்கள், 7 முன்னாள் அரசு அதிகாரிகள், 6 மருத்துவர்கள், 5 பொறியாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.  அதன்படி, அவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையை கூடுதலாக கவனிக்க உள்ளார். மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டுறவு துறையை கூடுதலாக கவனிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.