பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கூடுதல் பொறுப்பு…!

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு, பிரதமர் மோடி தலைமையில் பாஜக 2-வது முறையாக ஆட்சியை பிடித்த நிலையில், பிரதமர் மோடியின் அமைச்சரவை நேற்று முதல் முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையில் 43 பேர் இடம்பெற்றுள்ளனர். புதிய மத்திய அமைச்சரவையில் 11 பெண்கள், 13 வழக்கறிஞர்கள், 7 முன்னாள் அரசு அதிகாரிகள், 6 மருத்துவர்கள், 5 பொறியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், … Read more

இன்று சென்னை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா…!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியிலிருந்து 2 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். தமிழகத்தில், ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியிலிருந்து 2 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். இவர் இன்றிரவு 10 மணியளவில் சென்னை வரும் நிலையில், நாளை காரைக்கால்  மற்றும் விழுப்புரத்தில் நடைபெறவுள்ள பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.

பாஜகவில் இணைய உள்ள காங்கிரஸ் எம்எல்ஏ அஜந்தா நியோக் ?

அசாம் மாநிலத்திற்கு மத்திய உள்துறை அமித்ஷா  டிசம்பர் 26ஆம் தேதி  சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ அஜந்தா நியோக் பாஜகவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு மாநிலங்களுக்கு பாஜகவின் முன்னாள் தேசிய தலைவர்களில் ஒருவரும்,மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.அந்த வகையில் வருகின்ற 26 ஆம் தேதி அசாம் மாநிலத்திற்கு அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அம் மாநில பாஜக தலைவர் நுமல் மொமின் தகவல் தெரிவித்துள்ளார்.மேலும் மற்ற கட்சியினர் பாஜகவில் … Read more

எங்களுக்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள்! வாய்ப்பு கொடுத்தால் வங்கத்தை தங்கமாக மாற்றுவோம் – அமித்ஷா

மேற்கு வங்க மக்கள் திரிணாமுல், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள்  வாய்ப்பளித்தீர்கள். எங்களுக்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் மேற்குவங்கம் வந்தடைந்தார். கோல்கட்டாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமித்ஷா, திரிணாமுல் ஆட்சி முடிந்து, பாஜக ஆட்சிக்கு வரும் என்றும், 200-க்கும் அதிகமான தொகுதிகளை வென்று ஆட்சியில் அமர்வோம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், மேற்கு வங்க மக்கள் திரிணாமுல், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள்  வாய்ப்பளித்தீர்கள். எங்களுக்கும் … Read more

டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேற்றைய தினம் தமிழக பாஜக தலைவரான‌ எல்.முருகன் சந்தித்ததை தொடர்ந்து இன்று காலை விமானம் மூலம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னையில் இருந்து டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணம் மூலம், ஆளுநர் பன்வாரிலால் பிரதமர் நரேந்திர மோடி,  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க உள்ளதாகவும், டெல்லியில் வெள்ளிக்கிழமை வரை … Read more

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா டிஸ்சார்ஜ்.!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடந்த ஆகஸ்ட் 2 ம் தேதி கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார். பின்னர், ஆகஸ்ட் 14 -ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். இதைத்தொடர்ந்து, உடல் சோர்வு மற்றும் உடல் வலி போன்ற காரணங்களால் மீண்டும் கடந்த மாதம் 18-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதிக்கப்பட்டார். 12 … Read more

இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் கெடுப்பதாகத்தான் இந்தி இருக்கிறது – மு.க. ஸ்டாலின்

இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் கெடுப்பதாகத்தான் இந்தி இருக்கிறது என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி, இந்தி மொழி, அலுவல் மொழியாக அந்தஸ்து பெற்றது.இதன் விளைவாக ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ஆம் தேதி இந்தி தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில்,இந்திய கலாச்சாரத்தின் உடைக்க முடியாத அடையாளம் இந்தி. நம் நாட்டில் சுதந்திர போராட்டத்திற்கான புரட்சி ஏற்பட்ட காலத்திலிருந்தே ஒட்டுமொத்த மக்களையும் ஓரணியில் … Read more

நாங்க ரெடி, நீங்க ரெடியா-ராகுலுக்கு அமித் ஷா சவால்

குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு மாநாடு நடைபெற்றது. ராகுலுடன் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி விவாதம் நடத்த தயாராக உள்ளார் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். கடந்த 1955-ஆம் ஆண்டு இந்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து,பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் … Read more

மாநிலங்களவையில் சேம் ! சேம் ! என எதிர்க்கட்சி முழக்கம் !

காஷ்மீர் விவகாரம் தொடர்பான அமைச்சரவைக் கூட்ட முடிவுகள் பற்றி பேச இருப்பதால்  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக உறுப்பினர்கள் ஆஜராக  வேண்டும் என கொறடா உத்தரவு விட்டு இருந்தார். இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக முக்கிய அறிவிப்பை  உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் அறிவித்தார்.அந்த அறிவிப்பில் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் 370வது சட்டப்பிரிவை ரத்து என அறிவித்தார். மேலும் ஜம்மு -காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிகிறது.ஜம்மு-காஷ்மீர்  சட்டப்பேரவையுடன் கூடிய … Read more

பாஜக வை தலைமுழுகிய சிவசேனா !கூட்டணியை முறிக்க முடிவு…மோடி கலக்கம்..!

பா.ஜ.க தலைவர் அமித் ஷா, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்த நிலையில், அந்த கட்சியுடன் கூட்டணி இல்லை என சிவசேனா கூறியுள்ளது. கூட்டணி தலைவர்களை சந்திக்கும் பயணத்தில் மும்பைக்கு வந்த அமித் ஷா, அங்குள்ள உத்தவ் தாக்கரேவின் வீடான மாதோஸ்ரீக்கு சென்றார். அவருக்கு பூச்செண்டு கொடுத்த வரவேற்ற தாக்கரே, வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். இருவரும் நடத்திய பேச்சுவார்த்தை பின்னர் அமித் ஷா விடை பெற்று சென்றார். இதனிடையே சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், தேர்தலை தனித்து … Read more