ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்? – நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நாளை காலை ஆலோசனை நடைபெறுகிறது.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் இம்மாதம் தொடக்கத்தில் இருந்து குறைய தொடங்கிய நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு இருந்தாலும், பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் என சிலவற்றுக்கு தொடர்ந்து தடை நீடித்து வருகிறது.

இந்த நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் மேலும் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 11 மணிக்கு தலைமைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்