கூடுதல் தளர்வுகளா? கட்டுப்பாடுகளா? – முதல்வர் ஆலோசனை..!

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் வழங்குவதா? அல்லது கட்டுப்பாடுகளை அதிகரிப்பதா? என்று முதல்வர் ஸ்டாலின் தற்போது ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தொற்று பாதிப்பு தமிழகத்தில் குறைந்து வந்த நிலையில்,தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.ஆனால்,கடந்த  சில நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரானா பரவல் அதிகரித்து வருகிறது.இதனால், கோவை, திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆகஸ்ட் 9-ஆம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடையும் நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாகவும், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அரசின் உயர் அதிகாரிகளுடன் தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையிலும்,மேலும் கொரோனா 3 வது அலை வரும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருவதால் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.