நடிகை ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டுள்ளார்!காவத்துறை அதிகாரி திடுக்கிடும் தகவல்!

சினிமா உலகில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீ தேவி.இவர் உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்ள துபாய் சென்றிருந்தார்.அப்போது அவர் ஹோட்டல் அறையில் உயிரிழந்து உள்ளார்.

ஆனால் அவரின் மரணம் இயற்கையானது அல்ல அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கேரள டிஜிபி கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.கேரள காவல்துறையின் மருத்துவ ஆலோசராகவும் தடயவியல் மருத்துவ பேராசிரியராகவும் இருந்தவர் உமாடாதன்.

இவர் கடந்த வாரம் உடல் நல குறைவால் உயிரிழந்து விட்டார்.அவர் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து கேரள டிஜிபி ரிஷிராஜ்சிங்கிடம் பேசியுள்ளார்.இது குறித்து பேட்டியில் டிஜிபி பேசிய போது உமாடாதன் கூறியதை பேசியுள்ளார்.

அது என்னவென்றால் ஸ்ரீ தேவி மரணம் குறித்து சொல்லியதை பார்க்கும் போது அவர் படுகொலை செய்யப்பட்டதாக தெரிகிறது.அதில் அவர் எவ்வளவு குடித்துவிட்டு நீரில் மூழ்கி இருந்தாலும் ஒருவர் 1 அடி நீரில் மூழ்கி இறப்பது முடியாத காரியம்.

அவரை யாரேனும் நீரில் வைத்து அழுத்தினால் தான் மரணம் அடைய நேரிடும்.எனவே நடிகை ஸ்ரீதேவியின் மரணம் ஒரு கொலை சம்பவம் என கூறியுள்ளார்.இந்த தகவல் பலரை அதிச்சியில் ஆழ்த்தியுள்ளது.