கதை எல்லாம் மொக்க..தமிழ் படங்களில் நடிக்காததற்கான காரணத்தை உளறிய ஸ்ருதிஹாசன்!

Shruti Haasan : தமிழ் படங்களில் நடிக்காததற்கான காரணத்தை நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டு இருந்த நடிகைகளில் ஒருவர் ஸ்ருதிஹாசன். இவர் விஜய், அஜித், தனுஷ் என பல டாப் நடிகர்களுக்கு ஜோடியாக படங்களில் நடித்து இருக்கிறார். கடைசியாக தமிழில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான லாபம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அவர் எந்த தமிழ் படத்திலும் நடிக்க கமிட் ஆகவில்லை.

பட வாய்ப்புகள் அவர் வரவில்லையா அல்லது தெலுங்கு பக்கம் அவர் பிசியாக இருந்ததால் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லையா என்ற கேள்விகளும் ஒரு பக்கம் எழுந்தது. ஏனென்றால், அந்த அளவிற்கு ஸ்ருதிஹாசன் தொடர்ச்சியாகவே சமீபகாலமாக தெலுங்கு திரைப்படங்களில் நடித்துக்கொண்டு வருகிறார்.

அதனை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜுடன் இணைந்து இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் நடித்து அந்த பாடலை இசையமைத்து பாடியும் இருக்கிறார். இந்த பாடலும் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் ஊடகம் ஒன்றிற்கு கொடுத்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசன் தமிழ் படங்களில் நடிக்காததற்கான காரணத்தை கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய நடிகை ஸ்ருதிஹாசன் ” நான் எந்த மொழியில் எந்த நாடுகளுக்கும் நடிக்க சென்றாலும் நான் தமிழ் பொண்ணு தான். என்னுடைய வீடு சென்னை தான். ஆனால், எனக்கு தமிழ் சினிமாவில் வரும் கதைகள் எதுவும் பிடிக்கவில்லை. அதாவது நான் நடிக்கவேண்டும் என்று வரும் கதைகள் எனக்கு பிடிக்கவில்லை. பட வாய்ப்புகள் வருகிறது என்று எல்லா படத்திலும் நடிக்க கூடாது.

நான் ஒரு காதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கிறேன் என்றால் அந்த கதாபாத்திரத்தை மக்களும் நன்றாக இருக்கிறது என்று சொல்லவேண்டும். எனவே நல்ல கதை வந்தால் நான் கண்டிப்பாகவே நடிப்பேன். எனக்கும் தமிழ் படங்களில் நடிக்கவேண்டும் என்பது ஆசை தான்” எனவும் ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஸ்ருதிஹாசன் தனக்கு வரும் கதை எல்லாம் மொக்கை என சூசகமாக சொல்வதாக கூறி வருகிறார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.