நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க கோரி, நடிகர் விஷால் நீதிமன்றத்தில் மனுதாக்கல் !

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடைபெறவுள்ள, எம்.ஜி.ஆர் கல்லூரி நிர்வாகத்திற்கு பட்டினம்பாக்கம் காவல் ஆய்வாளர் கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.
அந்த கடிதத்தில், விஷால் அணிக்கும், பாக்யராஜ் அணிக்கும் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், எனவே, கல்லூரியில் தேர்தல் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நடிகர் விஷால் இந்த கடிதத்தை சுட்டிக்காட்டி, தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க சென்னை காவல்துறை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என விஷால் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.