நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்கும்வரை அவரது படத்தை வெளியிடாதீங்க – பாமக

இதுதொடர்பாக கடலூர் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி மாநில செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரைபட நடிகர் சூர்யா நடித்து கடந்த 2021 நவம்பர் 02-ம் தேதியில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் டி.செ.ஞானவேல் இயக்கிய இப்படத்தை (2D Entertainemnet) நிறுவனம் தயாரித்து நடிகர் சூர்யா நடித்துள்ளார்.

இருளர் சமுதாய மக்களின் வாழ்க்கையை மையயாக கொண்டுள்ள உண்மை சம்பவ அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம். அதில் வழக்கறிஞர் சந்துரு அதே பெயரில் இருக்க கதாபாத்திரத்தில் வந்த அனைவரும் அதே கதாபாத்தரத்தில் நடிக்க SI அந்தோனிசாமி என்ற தலித் கிருத்துவர் மட்டும் குருமூர்த்தி என்ற கதாபாத்திரத்தை வன்னியராக சித்தரிக்கப்பட்டுள்ளது.

காவல் உதவி ஆய்வாளராக நடித்தவர் ஒரு ஜாதி வெறியர் போல சித்தரித்து வன்னியர்களின் அடையாளமான அக்கினி கலசத்தை அவர் வீட்டில் காட்சிப்படுத்தி காவல் உதவி ஆய்வாளரை வன்னியர் சமுதாயத்தை சார்ந்தவர் என்றும் ஒட்டு மொத்த வன்னிய சமுதாய மக்கள் ஜாதி வெறி வன்மம் உள்ளவர்கள் போல காட்டியுள்ளனர்.

சகோதரத்துவமாக உள்ள இருளர், வன்னியர் சமுதாயத்தில் ஜாதி வன்மத்தை தூண்டும் விதமாக இத்திரைப்படம் எடுத்திருப்பது வன்னியர்களை கொச்சப்படுத்தும் விதமாகவும், வன்முறையாளர்களாகவும் தொடர்ந்து சித்தரித்து வரும் நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை அவர் வன்னியர் மக்களிடம் பொது மன்னிப்பு கேட்காத வரை கடலூர் மாவட்டதில் ஒளிப்பரப்ப அனுமதிக்க கூடாது என பாட்டாளி மக்கள் சார்பாகவும், வன்னியர் சங்கம் சார்பாகவும் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடித்து வெளியாகி பல்வேறு சர்ச்சைகள், பாராட்டுகளையும் பெற்ற ஜெய்பீம் திரைப்படத்துக்கு பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜெய்பீம் படம் விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா பொது மன்னிப்பு கேட்காத வரை அவரது திரைப்படத்தை ஒளிப்பரப்ப கடலூர் மாவட்டதில் அனுமதிக்க கூடாது என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்