2047இல் இந்தியா அசுர வளர்ச்சி பெரும்.! முகேஷ் அம்பானி நம்பிக்கை.!

2047ஆம் ஆண்டிற்குள் 13 மடங்கு வளர்ச்சி அதிகரித்து 40 ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை இந்தியா எட்டும். – முகேஷ் அம்பானி.

குஜராத் மாநிலத்தில், ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது இந்தியாவின் வளர்ச்சி பற்றி பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

அவர் குறிப்பிடுகையில், ‘ இந்திய பொருளாதாரம் தற்போது 3 ட்ரில்லியன் டாலரை கொண்டிருக்கிறது. இதே வளர்ச்சி நீடித்தால், 2047ஆம் ஆண்டிற்குள் 13 மடங்கு வளர்ச்சி அதிகரித்து 40 ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை இந்தியா எட்டும். உலக பொருளாதாரத்தில் முதல் 3 இடத்திற்குள் இந்தியா இருக்கும்.

இந்தியா சுதந்திரம் பெற்ற 100 ஆண்டுகள் நிறைவடையும்போது, பொருளாதார வளர்ச்சியில் இந்திய நாடு பல்வேறு முக்கிய மாற்றங்களை எதிர்கொள்ளும். பெரிய வளர்ச்சியை எட்டும். பயோ-எனர்ஜி, டிஜிட்டல் புரட்சி, கிளீன் எனர்ஜி  ஆகிய மூன்று துறைகளும் எதிர்காலத்தில் இந்தியாவின் அசுர வளர்ச்சி அடையும். எனவும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment