பாடத்திட்டங்களை குறைக்க ஒரு சிறப்புக் குழு – அமைச்சர் செங்கோட்டையன்

10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ஈரோடு மாவட்டம்  கோபியில் செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் . 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் ஜூலை மாதம் முடிவுகள் வெளியாகும் என தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள்  திறக்கப்படுவது குறித்து முதலமைச்சர் தலைமையிலான குழுதான் முடிவு செய்யும்.  தற்போது பள்ளிகளின் வேலை நாட்கள் குறையும் என்பதால் பாடத்திட்டங்களை குறைக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது . அந்த குழு அளிக்கும் அறிக்கையை பொறுத்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். 

 

author avatar
Castro Murugan