கோவிலுக்கு படையெடுக்கும் பக்தகோடிகளை வரதே! என்றால் பக்தியா??பகுத்தறிவா??பாய்ந்த ஆ.ராசா

கோவிலுக்கு வராதே என்றால் அது பக்தியா பகுத்தறிவா? ஆன்மீகமா அறிவியலா? என்று திமுக எம்.பி ஆ.ராசா கொரோனா குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.

உலக முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக கடும் பாதிப்புக்களையும்,உயிர்ழப்புகளையும் ஏற்படுத்தி வரும் நிலையில்  இந்தியாவிலும் பரவி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  83 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரநலத்துறை தெரிவித்துள்ளது.

நாட்டில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் எதிரோலியாக கர்நாடகா, கேரளா, டெல்லி, கோவா, உத்தர பிரதேசம், சத்தீஷ்கர், உத்தரகாண்ட், பீகார், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பள்ளிகள் அனைத்தும் வரும் 31.,ஆம் தேதி வரை மூடப்படும் என்று அறிவித்துள்ளன.

இந்நிலையில்  திமுக எம்.பி ஆ.ராசா கொரோனா குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நோய் வந்தால் பக்தகோடிகள் கோவிலுக்குபோய் எல்லாம் வல்ல கடவுளிடம்தான் வேண்டமுடியும்.கோவிலுக்கு வராதே என்றால் அது பக்தியா பகுத்தறிவா?ன்மீகமா அறிவியலா? என்று கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.

author avatar
kavitha