பூங்காவில் செல்பி எடுக்க முயன்ற பெண் !!பெண் மீது பாய்ந்த கருஞ்சிறுத்தை !!!

  • அமெரிக்காவின்  அரிசோனா மாகாணத்தின் தலைநகர் பீனிக்சில் உயிரியல் பூங்கா உள்ளது.
  • கருஞ்சிறுத்தையுடன் செல்பி எடுக்க முயன்றார்.
  • அப்போது கருஞ்சிறுத்தை திடீரென அந்த பெண் மீது பயந்து கையை கடித்து குதறியது. 
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் தலைநகர் பீனிக்சில் உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவை சுற்றிப்பார்ப்பதற்காக 30 வயதான பெண் ஒருவர் வந்தார்.
அப்போது அங்கு கூண்டுக்குள் அடைத்து வைத்து இருந்த கருஞ்சிறுத்தையுடன்
செல்பி எடுப்பதற்காக பார்வையாளர்கள் நுழையக்கூடாது என்பதற்காக வைக்கப் பட்டிருந்த பாதுகாப்பு தடையைதாண்டிசென்றார்.
கூண்டு அருகில் நின்று கருஞ்சிறுத்தையுடன் செல்பி எடுக்க முயன்றார்.
அப்போது கருஞ்சிறுத்தை திடீரென அந்த பெண் மீது பயந்து கையை கடித்து குதறியது.
இதில் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு அருகில்உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
author avatar
murugan

Leave a Comment