மனித கண்ணில் இருந்த ஒரு டஜன் லார்வாக்கள்…, அதிர்ச்சியில் மருத்துவர்கள்..!

பிரான்ஸ் நாட்டை  சேர்ந்த 53 வயது நபர் தனது கண்ணில் எரிச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர் பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்த போது எதோ கண்ணுக்குள் ஈ போன்ற ஒன்று நுழைந்ததாகவும் தெரிவித்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கண்ணில் ஈக்களின் லார்வாக்கள் டஜன் கணக்கில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மருத்துவர்கள் உடனடியாக அவற்றை அகற்றியுள்ளனர். மேலும் இது குறித்து தெரிவித்துள்ள மருத்துவர்கள், இவ்வாறு கண்ணுக்குள் லார்வாக்கள் உருவாகத் தொடங்கி விட்டால் ஏற்படும் கண் எரிச்சல் நாம் கண்ணை கழுவுவதால் போகாது, மருத்துவமனையில் ஆயுதங்கள் வைத்து எடுத்தால் மட்டுமே அவற்றை நீக்க முடியும், ஏனென்றால் அவற்றின் வாய்ப்பகுதியில் கொக்கி போன்ற அமைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

author avatar
Rebekal