சென்னை அருகே இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை .? முரணான தகவல்கள்… குழப்பத்தில் போலீசார்.!

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பெண்ணை கத்தி முனையில் இருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்த 11ஆம் தேதி காவலன் செயலி மூலம் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஓர் புகார் வந்ததது. அதில், அந்த பெண் வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் என்றும், சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தங்கி அதேபகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருவதாகவும் பதிவிட்டுள்ளார்.

அவர், அன்று வேலை முடிந்து வீடு திரும்புகையில், காவலர் உடை அணிந்த இருவர் என்னை சந்தேகத்தில் பெயரில் அழைத்து சென்றதாகவும், அவர்கள் ஸ்ரீ பெரும்புதூரை கடந்து சென்றதும் தான் கூச்சலிட்டதாகவும், உடனே அவர்கள் என்னை கத்தியை காட்டி மிரட்டி அருகில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் என்னை இருவரும் பாலியல் வன்கொடுமை செய்தனர். என குற்றம் சாட்டினார்.

இதனை அடுத்து அந்த புகாரின் அடிப்படையில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அந்த பெண்ணிற்கு மருத்துவ சோதனை நடைபெற்றது. அதில் அந்த பெண் பலருடன் உறவு வைத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், அந்த பெண்ணிடம் எந்த புகைப்படத்தை காட்டினாலும், இவர் போல தான் இருக்கிறது என கூறுகிறாராம். இதனால், போலீசார் குற்றவாளியை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனராம். சிசிடிவி அடிப்படையில் 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment