திருச்செந்தூர் அருகே தலை துண்டிக்கப்பட்டு கல்லூரி மாணவன் வெட்டி கொலை!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூரை அடுத்து, இகல்லூரி மாணவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், வெட்டி கொலை.

ஆத்தூர் அருகே தலைவன்வடலி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவன். இவரின் மகன் சத்தியமூர்த்தி. 20 வயதற்காகும் அவர், தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரில் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இவர் அப்பகுதியில் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து ஆத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.