திமுக பேச்சாளர் மீது ஆளுநர் ரவி தரப்பில் அவதூறு வழக்கு.!

ஆளுநர் பற்றி அவதூறு பேசியதாக திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது. 

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்னமூர்த்தி என்பவர் அண்மையில் ஒரு திமுக அரசியல் கூட்டத்தில் பேசுகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து ஒருமையில் அவதூறு விளைவிக்கும் விதமாக பேசினார். இதற்கு பலரும் தங்கள் எதிர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஆளுநர் ரவி தரப்பில் இருந்து ஆளுநர் மாளிகையில் இருந்து காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தனர். இந்நிலையில் தற்போது ஆளுநர் ரவி தரப்பில் இருந்து ஆளுநர் ரவி பற்றி அவதூறு விளைவிக்கும் வகையில் பேசியதாக கூறி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment