சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்து முதல்வர் ஆலோசனை.!

சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்து முதல்வர் ஆலோசனை.!

தமிழகத்தின் சட்டம் ஒழுங்குநிலை குறித்து, முதல்வர் தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். 

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அரசு சார்ந்த முக்கிய அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன், ஸ்டாலின் ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கிறார்.

சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை தடுப்பது மற்றும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், போதைப்பொருள் புழக்கத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி முதல்வர் ஆலோசனை வழங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்களின் நிலவரம் குறித்தும் முதல்வர் ஸ்டாலின், விசாரிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை, இன்னும் சீர்படுத்த வேண்டிய ஒரு ஆலோசனை கூட்டமாக இது நடைபெற்று வருகிறது.

author avatar
Muthu Kumar
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *