உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் அரசு அருங்காட்சியகத்தில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இடம் பெற்றன. இக்கண்காட்சியை கன்னியாகுமரி அரசு உறுப்பு கல்லூரி ஆங்கிலத் துறை தலைவர் சகாய சுதா தொடங்கி வைத்தார். இக்கண்காட்சியை கன்னியாகுமரி அரசு உறுப்புக்கல்லூரி மாணவர், மாணவிகள் பார்வையிட்டனர்.