இந்தோனேசியாவில் எற்பட்ட நிலநடுக்கம்..! 345 பேர் பலி..!!

இந்தோனேசியாவின்  சுற்றுலாத் தலமான லோம்போக் தீவில்  ஞாயிற்றுக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றிலும் இடிந்து நாசமாகின.
இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 131-ஆக அதிகரித்துள்ளதாக பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்தானர் ஆனால் பலி எண்ணிக்கை 345ஐத் தாண்டிவிட்டதாக உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் காயமடைந்த 236 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். வீடுகளை இழந்த 70 ஆயிரம் பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment