இறுதிப்போட்டியில் குரேசியா vs பிரான்ஸ்

21வது உலகக்கோப்பைக்கான  கால்பந்த்து தொடர் ரஷியாவில் ஜூன் 14 ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது.அதில் 32 அணிகள் பங்குபெற்றுள்ளன.தற்போது  அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.லீக் ஆட்டங்கள் கால் இறுதி போட்டிகள் முடிவுற்ற நிலையில் தற்போது அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது.இறுதி போட்டி ஜூலை 15தேதி நடைபெற உள்ளது.

அதிர்ச்சி அளித்த அணிகள்

இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அதிரிச்சி அளிக்கும் வகையில் சில அணிகள் கால் இறுதி போட்டிக்கு தகுதியாகாமல் லீக் ஆட்டங்களில் வெளியானது.குறிப்பாக உலக அளவில் தலைசிறந்த வீரர்களாக விளங்கும் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகியோரின் அணிகள் லீக்  ஆட்டங்களிலே வெளியானது.ரொனால்டோ பொர்ஜுகள் அணிக்கும் மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்கும் விளையாடி வருகின்றனர்.இந்த இரு நாடுகளும் வெளியானது அந்த இரு நாடுகளின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அரையிறுதி போட்டி

முதல் அரையிறுதி போட்டியில் பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் மோதின.அதில் பிரான்ஸ் அணி 1-0என்ற கணக்கில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி முதலில் இறுதி போட்டிக்கு தகுதியானது.

இரண்டாவது அரையிறுதியில் குரேசியா,இங்கிலாந்து அணிகள் மோதின.அதில் குரேசியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி இறுதி போட்டிக்கு தகுதியானது.

இதனை தொடர்ந்து வருகின்ற 15ஆம்  தேதி ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ்,குரேசியா இரண்டு அணிகளும் இறுதிப்போட்டியில் மோத  உள்ளன.இந்த போட்டி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள லுகினி  மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment