கள்ளச்சாராயம் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என ஆளுநர் தமிழிசை பேட்டி.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்த நிலையில், செங்கல்பட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ள சாராய விற்பனையை ஒடுக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை, கள்ளச்சாராயம் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்; புதுச்சேரியில் போதைப்பெருள் மற்றும் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; எந்த பகுதியில் இருந்து கள்ளச்சாராயம் வந்தாலும் அதனை கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.