தமிழகத்தில் விஷ சாராய உயிரிழப்பு 21-ஆக உயர்வு! தமிழக அரசுக்கு நோட்டீஸ்!

விஷச்சாராயத்தை குடித்த ஜம்பு, சங்கர் ஆகிய இருவரும் சிச்சை பலனின்றி உயிரிழப்பு.

தமிழகத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது. இதில், செங்கல்பட்டில் சித்தாமூர் அருகே விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது. விஷச்சாராயத்தை குடித்த ஜம்பு, சங்கர் சிச்சை பலனின்றி செங்கல்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்த நிலையில், செங்கல்பட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதன்படி, இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநர் 4 வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக மருத்துவ அறிக்கைகளை தாக்கல் செய்யவும் தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்