ஆக்கிரமிப்பு நிலங்களை மீது 5,400 மரக்கன்றுகள் நட்ட தமிழக அமைச்சர்கள்.!

விழுப்புரத்தில் மீட்கப்பட்ட ஆக்கிரமிப்பு நிலங்களில் மரம் நடும் விழாவில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டனர்.   

ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்ற தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு, ஈரோடு மாவட்டம் கொசப்பாளையம்  அருகே 23 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டுள்ளது. அதில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது.

அதில், மீட்கப்பட்ட 23 ஏக்கரில் 15 ஏக்கர் நிலத்தில் 5,400  மரக்கன்றுகளை நடும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், அமைச்சர்கள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment