பணிக்கு வராத 4 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட்!

அரசு பொது மருத்துவமனையில் பணிக்கு வராமல் இருந்த 4 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்து அமைச்சர் உத்தரவு.

மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் உரிய நேரத்தில் பணிக்கு வராமல் இருந் 4 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது மருத்துவர்கள் பணிக்கு வராதது தெரிந்ததை அடுத்து 4 அரசு மருத்துவர்களையும் சஸ்பெண்ட் செய்து அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டார். மேலும், மருத்துவமனையை ஆய்வு செய்யாமல் இருந்த மாவட்ட மருத்துவ இணை இயக்குனரை பணியிடமாற்றம் செய்யவும் அமைச்சர் உத்தரவிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment