முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த சீமான்..!

உடல்நலம் குறித்து தொலைபேசியில் விசாரித்த முதல்வருக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.

திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வே கேட் பகுதிகளில் பாலம் அமைப்பதற்காக வீடுகள் இடிக்கப்பட்டு வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக நேற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்றிருந்தார்.

வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் முழக்கமிட்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போதே எதிர்பாராத விதமாக திடீரென சீமான் மயங்கி விழுந்தார். பின்னர், அங்கிருந்த நாம் தமிழர் கட்சியினர் உடனடியாக சீமானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில், சீமானின் உடல்நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சீமான் தனது ட்விட்டரில் எனது உடல்நலம் குறித்து அலைபேசியில் அழைத்து அக்கறையுடன் விசாரித்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றியையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

author avatar
murugan