தானேவில் 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்தவர் கைது..!

மகாராஷ்டிராவில் ஒருவர் ஆறு வயது மருமகளை (சகோதரி மகள்) பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் கைது செய்தனர்.

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள உல்ஹாஸ்நகர் நகரைச் சேர்ந்த ஒருவர் ஆறு வயது மருமகளை (சகோதரி மகள்) பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் கைது செய்தனர். 42 வயதான அந்த நபரை நேற்று கைது செய்யப்பட்டதாக ஹில் லைன் காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியுடன் விளையாடுவதாக கூறி அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சில  நாட்களுக்கு முன்பு, சிறுமியின் மூத்த சகோதரர் தனது பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் அந்த நபர் மீது புகார் அளித்தனர். பின்னர், சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர். அதன்பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஐபிசி பிரிவு 376 (கற்பழிப்பு) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

author avatar
murugan