15 நாட்களில் தேர்வு முடிவுகள்..!!!கோரிக்கைகளை…!! ஏற்று அறிவித்தார் செங்கோட்டையன்…!!!

சிறப்பாசிரியர் தேர்வு எழுதிய 300-க்கும் மேற்பட்டவர்கள் அமைச்சர் செங்கோட்டையனை ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் சந்தித்து தங்களின் கோரிக்கை மனுக்களை அளித்தனர். உடற்கல்வி, தையல், இசை மற்றும் ஓவிய ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதில் உள்ள ஆயிரத்து 325 காலிப்பணியிடங்களுக்கு 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினர்.

தேர்வு எழுதி 7 மாதங்கள் ஆகியும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாததால், அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து மனு அளித்தனர். அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்ததோடு, இன்னும் 15 நாட்களில் தேர்வு முடிவுகள் ஓ.எம்.ஆர் சீட்டுடன் வெளியிடப்படும் என்றும், ஜூன் மாதத்திற்குள் பணி ஆணை வழங்கப்படும் என்றும் செங்கோட்டையன் உறுதியளித்தார். மனுகொடுக்க வந்தவர்களிடம் குறைகேட்டதுடன், காலை சிற்றுண்டிக்கும் ஏற்பாடு செய்து அனுப்பிய அமைச்சரின் அன்பைக் கண்டு அவர்கள் நன்றி தெரிவித்து விடைபெற்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment