செல்போன் சிக்னல் இல்லை, போதிய இணைய வசதி இல்லை – கமல்ஹாசன் ட்வீட்

தமிழகத்தில் பல கிராமங்களில் செல்போன் சிக்னல் இல்லை. போதிய இணைய வசதி இல்லை என்று கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவரது பதிவில், தமிழகம் முழுக்கப் பயணித்துக் கொண்டிருக்கிறேன். பல கிராமங்களில் செல்போன் சிக்னல் இல்லை. போதிய இணைய வசதி இல்லை.  கிராமத்துப் பிள்ளைகள் லாக் டவுனில் (Lockdown) ஆன்லைன் வகுப்புகளைத் தொடர முடியவில்லை. கல்வி எனும் அடிப்படை உரிமை இவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. எமது ‘டிஜிட்டல் இல்லங்கள்’ திட்டத்தின் அவசியத்தை உணர்கிறேன் என தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சீரமைப்போம் தமிழகத்தை என்ற பெயரில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்