தனக்கு மது தேவைப்பட்டால் பிள்ளையை பிச்சையெடுக்க அனுப்பும் தந்தை! இல்லையென்றால் சித்திரவதைக்கு ஆளாகும் சிறுவன்!

தனக்கு மது தேவைப்பட்டால் பிள்ளையை பிச்சையெடுக்க அனுப்பும் தந்தை.

இன்று மதுவுக்கு அடிமையாகியுள்ள  பல ஆண்களின் குடும்பநிலை மோசமாக தன உள்ளது. அந்த வகையில், ராஜஸ்தானில் ஒரு  சிறுவனின் தந்தை, தனக்கு மது தேவைப்படும் போதெல்லாம், தனது 11  வயது  மகனை பிச்சையெடுக்க அனுப்பியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த சிறுவனை  அடித்து சித்திரவதை செய்ததோடு, அழுது சத்தமிடக் கூடாது என்றும்  மிரட்டியுள்ளார்.

இந்நிலையில், மனமுடைந்த சிறுவன், குழந்தைகள் பாதுகாப்பு எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார். இதனையடுத்து, சிறுவனின் வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர். அங்கு சிறுவனின் நிலை கண்டு அதிர்ந்து போன போலீசார், சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அந்த சிறுவனிடம் விசாரணை மேற்கொண்ட போது, தான் பள்ளிக்கு செல்வதாகவும், ஊரடங்கு காலத்தில், ஆங்ளின் வகுப்பில் படிக்க அவரது தந்தை உதவியதாகவும்  கூறியுள்ளார். அவருக்கு  எப்போதெல்லாம் மது தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் தன்னை பிச்சை எடுக்க  சில்வதற்காகவும், 200 ரூபாய்க்கு ரூபாய்க்கு குறைவாக பிச்சையெடுத்தால், அடித்து துன்புறுத்துவதாகவும்  கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.