சீறிய சிராஜ்..சிறப்பான சாதனை

ஐபிஎல்2020 38வது லீக் தொடர் அபுதாபியில் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு அணியும் தங்களது முழு திறனை வெளிப்படுத்தி வெறித்தனத்தோடு எதிரணிகளை திணறடித்து வருகிறது.

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி பெங்களூரு அணியை எதிர்கொண்டது.

இதில் பெங்களூரு வீர்ர் முகமது சிராஜ் 2 மெய்டன் ஓவர்களை தொடர்ந்து வீசி சாதனை படைத்தார்.

ஐபிஎல் வரலாற்றிலேயே 2 ஓவர்களை தொடர்ந்து மெய்டனாக வீசிய முதல்வீர்ர் என்ற பெருமை  சிராஜ் தனதாக்கி கொண்டார்.

அந்த போட்டியில் 4 ஓவர்களை வீசிய அவர் 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



author avatar
kavitha