பாகிஸ்தான் ராணுவம் அத்துமிறல்… இந்திய வீரர் பலி!!

ஸ்ரீநகர்:காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர் வீர மரணம் அடைந்தார்.காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே இன்று மாலை முதல் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கி மற்றும் சிறிய ரக பீரங்கிகளால் இந்திய நிலையை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு இந்திய பாதுகாப்பு படையினரும் பாகிஸ்தான் நிலைகளை தாக்கினர்.இரு தரப்புக்கும் பல மணிநேரங்களாக சண்டை தொடர்ந்து நடைபெற்றது. பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஜெயத்ராத் சிங் என்ற இந்திய வீரர் மரணமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எல்லை பகுதியில் பதற்றம் நீடிக்கிறது..

author avatar
Castro Murugan

Leave a Comment