பசு மாட்டின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் இருந்து எய்ட்ஸ் நோயினை எதிர்த்து போராடுவதற்கான புதிய வழிமுறையை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.
இது தொடர்பாக, விஞ்ஞான இதழான Nature-இல் கட்டுரையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், பசுவினைக் கொண்டு ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் அமெரிக்க விஞ்ஞானிகள் தங்களது புதிய கண்டுபிடிப்பினை வெளியிட்டுள்ளனர்.
4 பசு கன்றுகளுக்கு ஹெச்.ஐ.வி வைரஸை செலுத்தி ஆராய்ச்சி மேற்கொண்ட “டேவின் சோக்” தலைமையிலான விஞ்ஞானிகள் ஆச்சரியம் நிரம்பிய, அதிர்ச்சிகரமான முடிவுக்கு வந்து சேர்ந்துள்ளனர். ஹெச்.ஐ.வி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான சிறிது நேரத்திலேயே அதனை எதிர்கொள்வதற்கான சக்திவாய்ந்த ஆண்டி-பயோடிக்கள் பசுவின் உடலின் உருவாவது தெரியவந்துள்ளது.
ஹெச்.ஐ.வி வைரஸ்களுக்கு எதிராக பசுவின் உடலின் உருவான ஆண்டி-பயோடிக்களை பிரித்தெடுத்துள்ள அமெரிக்க விஞ்ஞானிகள், அதனை மனிதனுக்கு பயன்படுத்துவது தொடர்பாகவும், மனிதனின் உடலில் ஏன் இத்தகைய சக்திவாய்ந்த ஆண்டி-பயோடிக் தோன்றுவதில்லை என்பது குறித்தும் தீவிர ஆய்வில் மேற்கொண்டுள்ளனர்.
அமெரிக்காவின் National Institute of Allergy and Infectious Diseases நிறுவனத்தின் தடுப்பூசித்துறை இயக்குந ஜான் மாஸ்கோலா, “எய்ட்ஸ் நோய்க்கான நேரடியான தடுப்பூசியை கண்டுபிடிக்க இப்போது நடைபெற்றுள்ள ஆய்வுகள் போதுமானவையில்லை என்றும், ஹெச்.ஐ.வி வைரஸ் எவ்வாறு மனித நோயெதிர்ப்பு மண்டலத்தில் இருந்து தப்பிக்கிறது என்பது குறித்தும் எவ்வித முடிவுகளும் இந்த சோதனையில் வந்தடையவில்லை என்றாலும், எய்ஸ்ட்க்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளோம்” என்றும் தெரிவித்துள்ளார்.