முன்னாள் முதலமைச்சர் மகன் திருமணத்தில் விதி மீறினால் நடவடிக்கை – கர்நாடக துணை முதலமைச்சர் எச்சரிக்கை!

கர்நாடகாவில் உள்ள முன்னாள் முதலமைச்சராகிய குமாரசாமி அவர்களின் மகன் நிகில் கவுடா அவர்களின் திருமணம் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணபாப்பாவின் பேத்தி ரேவதியை திருமணம் செய்கிறார்.  இதனை தொடர்ந்து ராம் நகர் மாவட்டத்தில் உள்ள பண்ணை வீட்டில் திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கொரோனாவால் அதிக அளவில் கூட்டம் கூட கூடாது என்று சொல்லியிருப்பதால் குமாரசாமி நெருங்கிய உறவுகள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு நிச்சயத்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்த வேளையில், அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என கடும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது.
இதனால் கர்நாடக துணை முதலமைச்சர் இன்று திருமணத்தில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் விதிமீறல் செய்தால் நிகில் அவர்களின் திருமணத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

author avatar
Rebekal