'ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது!' – 'பாலியல் குற்றங்கள்' குறித்து இயக்குனர் பாக்யராஜ் சர்ச்சை கருத்து!

பொள்ளாச்சி சம்பவம் குறித்து இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ் அண்மையில் நடைபெற்ற விழா நிகழ்ச்சியில் சர்ச்சையான கருத்துக்களை அந்த விழாவில் தெரிவித்தார். தற்போது அவரது பேச்சு இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.
எம்.பிக்சர்ஸ் எனும் நிறுவனம் தயாரித்துள்ள  ‘கருத்துக்களை பதிவு செய்’ எனும் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அந்த விழாவில் இயக்குனர் பாக்யராஜ் அரசியல் பிரமுகர் விஜயதாரணி, எஸ்.வி.சேகர், மீராமிதுன் என பலர் கலந்து கொண்டனர்.
அவ்விழாவில் பேசிய இயக்குனர் பாக்யராஜ் பல சர்ச்சையான கருத்தை முன்வைத்தார். அவர் பேசும்போது, ‘அனைத்து பெரிய திரையரங்குகளிலும் சிறிய திரைப்படமும் ஓடும்படி அரசு ஒரு சட்டம் இயற்ற வேண்டும். என கேட்டுக்கொண்டார். மேலும், இன்று போய் நாளை வா, கைதியின் டைரி என இரு படங்களையும் ஒரே இரவில் நான் எழுதி முடித்தேன். எனவும், தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்களின் பலவீனத்தை அந்த ஆண்கள் பயன்படுத்தி கொண்டனர். எனவும், இதற்கு ஆண்கள் மட்டும் பொறுப்பல்ல. அந்த பெண்களிடமும் தவறு உள்ளது எனவும் பேசினார்.
‘ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது’ என்றும் தெரிவித்தார். பெண்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். ஆண் தவறான நடத்தையில் இருந்தாலும் தான் கட்டிய முதல் மனைவிக்கு குறை வைப்பதில்லை எனவும், ஆனால், ஒரு பெண் நடத்தை சரியில்லாமல் போனால் தன் கணவனை கொலை செய்யும் அளவிற்கு சென்றுவிடுகிறாள் எனவும் சர்ச்சையான கருத்தை தெரிவித்தார்.
இயக்குனர், நடிகர் கே.பாக்யராஜ் இந்த சர்ச்சை கருத்துக்கள் தற்போது இணையத்தில் பேசும் பொருள் ஆகி வருகின்றன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.