மணிரத்னம் இயக்கத்தில் அவரது கனவு படமாக உருவாக உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தை மணிரத்னம், லைகா நிறுவனத்துடன் இணைந்து பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இப்படத்த்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ் என பலர் நடிக்க உள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது.
இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதற்காக த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்க்கு முன்னர் த்ரிஷா மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஆயுத எழுத்து படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.