பள்ளி சிறுமிக்கு திருநங்கைகள் செய்த கொடுமை!திருநங்கைகளை கைது செய்த காவல்துறையினர்!

சென்னையில் கடந்த ஜூலை 26-ம் தேதி அன்று பள்ளி சிறுமி ஒருவர் டியூசனுக்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது அந்த சிறுமியை சாந்தி காலணி 5வது தெருவில் இரு திருநங்கைகள் வழிமறித்துள்ளனர்.

பின்னர் அந்த சிறுமியிடம் இருந்து செல்போனை கேட்டு மிரட்டியுள்ளனர்.அப்போது பயந்து போன சிறுமி தம்மிடம் இருந்த செல்போனை அவர்களிடம் கொடுத்துள்ளார்.

பின்னர் வீட்டிற்கு வந்த சிறுமி நடந்த சம்பவத்தை தம் தந்தையிடம் கூறியுள்ளார்.இதன் காரணமாக அந்த சிறுமியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி கேமராவை பார்த்தபோது இரு திருநங்கைகள் செல்போனை சிறுமியிடம் இருந்து பறித்தது தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து தொடர்ந்து நடத்திய விசாரணையில் இரு திருநங்கைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.