சந்தானம் நடிப்பில் இந்த வாரம் ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் ஏ-1 ( அக்கியூஸ்ட் நெ.1 ) இந்த படத்தை ஜான்சன் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தின் டீசர், வெளியாகி சர்ச்சையாகி, இந்து பிராமண அமைப்பினர் புகார் கொடுக்கும் அளவிற்கு சென்றது.
அத்தனையும் மீறி படம் வெளியாக உள்ளது. இன்று படத்தின் ப்ரோமோ காட்சி வெளியாகியுள்ளது இதில் மொட்ட ராஜேந்திரன் ஒரு போலீஸ் காரரின் விடியோவை வைத்து மிரட்டி பணம் வாங்குகிறார். அப்போது பணம் வாங்க சென்றவர் பாஸ்வேர்டாக, முதலில் வம்பு – வயந்தாரா எனவும், அடுத்ததாக பிரபுபாபா – வயந்தாரா என கூறுவார் அதுவும் தவரென்பதால் விக்னேஷ் பவன் – பயன்தரா என கூறுவார். இந்த பெயர்களை கேட்டவுடன் கோலிவுட் ரசிகர்களுக்கு வேறு யாரோ ஞாபகம் வருவது போல இருக்கிறதே, நமக்கு எதுக்கு வம்பு என எதுவும் கூறாமல் இருக்கின்றனர்.