தனி நபர் அந்தரங்கம் அடிப்படை உரிமை என ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆதார் அட்டையை கட்டாயமாக்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதார் அட்டையை அரசியல் சாசன ரீதியில் அங்கீகரிக்க கூடாது என காரக் சிங், எம்.பி.சர்மா ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.