வழக்குகளை காரணம் காட்டி என்னை யாரும் மிரட்ட முடியாது-கார்த்தி சிதம்பரம்

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வெற்றிபெற்றார்.

இந்நிலையில்  கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,வழக்குகளை காரணம் காட்டி என்னை யாரும் மிரட்ட முடியாது. மநீம, நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளை உதாசீனப்படுத்திவிட முடியாது. நாம் தமிழர் கட்சி வெற்றி பெறாது எனத்தெரிந்தும் 1 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். அடுத்த தேர்தலில் அந்த வாக்குகளை கவரும் நடவடிக்கைகளில் திமுக-காங்கிரஸ் ஈடுபட வேண்டும் என்று  கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Leave a Comment