தொடர்கிறது மோடியின் தியானம் நாளை காலை வரை

மக்களவை தேர்தல் 7-ஆம் கட்டத்தை நெருங்கிய நிலையில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் பேசிய மோடி எனக்கு ஆட்சி செய்ய 5 ஆண்டுகள்  வாய்ப்பு அளித்தமைக்கு மிக்க நன்றி எனவும் தேர்தல் பிரச்சாரங்கள் முடிந்த நிலையில் நான் சற்று ஓய்வெடுக்க செல்கிறேன் என்று கூறினார்.

இதனிடையே ராணுவ ஹெலிகாப்டரில் உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் சென்ற மோடி அங்கு பாரம்பரிய உடையில் கையில் ஒரு தடியுடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.இதன் பின் அங்குள்ள குகைக்கோவிலில் தியானம் செய்ய தொடங்கினார். இந்த தியானம் மக்ள்ளவை தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காகவாம். மோடி நாளை காலை வரை தொடர்ந்து தியானம் செய்யயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, இதனால் அங்கு  பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment