பிக்பாஸ் நமக்கு செட்டாகதுண்ணே…அலறும் கஞ்சா கருப்பு!

பிக்பாஸ் வீட்டிற்கு சென்று வந்ததில் விழுந்துவிட்ட இடைவெளியை மீண்டும் நிரப்ப ஆரம்பித்திருக்கிறார் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு.
தற்போது சந்தனத்தேவன், அருவா சண்ட, கிடா விருந்து உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள ‘குரங்கு பொம்மை’ இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. அடுத்ததாக ‘பள்ளிப்பருவத்திலே’ ரிலீசாக இருக்கிறது.
‘ஒவ்வொரு படத்துலயும் ஒவ்வொரு விதமான கேரக்டர்ல நடிச்சிருக்கேண்ணே… இன்னும் நாலஞ்சு படம் பேசிட்டிங்காய்ங்க. இனிம காமெடியிலதான் கவனம் செலுத்த போறேன்’ என்கிறார் கருப்பு.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஆர்த்தி, ஜூலி ஆகியோர் மீண்டும் உள்ளே செல்கிறார்கள். கஞ்சா கருப்புக்கு அப்படியொரு ஐடியா இருக்கிறதா?
‘ஆத்தாடி, அது வேற ஏரியாண்ணே… நமக்குலாம் அது செட்டாகதுண்ணே…’ என்கிறார் சிரித்துக்கொண்டே.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment