9 மணி நேரத்தில் இறந்துவிடும் என்று கூறப்பட்ட குழந்தை கொண்டாடிய 9வது பிறந்த நாள்

பிரேசில் நாட்டில் அகோர முகத்துடன் ஒரு குழந்தை கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன் பிறந்தது. இந்த குழந்தையின் முகத்தில் கண், காது, வாய், மூக்கு ஆகியவை இல்லாமல் ஒரு சதைப்பிண்டமாக இருந்தது.
இந்த குழந்தை பிறந்தவுடன் பெற்றோர்களிடம் மருத்துவர்கள் இந்த குழந்தை ஒன்பது நேரம் மட்டுமே உயிர் வாழும். எனவே வீட்டுக்கு எடுத்து செல்லுங்கள் என்று கூறி கைவிட்டனர்.
ஆனால் அந்த குழந்தையை அன்புடன் வளர்த்த பெற்றோர்கள் கடந்த ஆறு ஆண்டுகளில் எட்டு சர்ஜரிக்கள் செய்து தற்போது ஒருவழியாக ஒரு முகத்தை வரவழைத்தனர். சமீபத்தில் இந்த குழந்தை தனது ஒன்பதாவது பிறந்த நாளை கொண்டாடியது என்பது குறிப்பிடத்தக்கது

author avatar
Dinasuvadu desk

Leave a Comment